shadow

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது தனுஷ் படம்

தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் ஆஸ்கர் விருதை வெல்லும் என அனைத்து இந்தியர்களும் எதிர்பார்த்த நிலையில் இன்று அந்த படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளீயேறியுள்ளது.

சிறந்தபடம், சிறந்த துணைநடிகர், சிறந்த படத்தொகுப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்தப் படம், ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டதால் நிச்சயம் சிறந்த வெளிநாட்டுப்படம் என்ற ஆஸ்கர் விருதை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்கிற பிரிவிற்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ‘விசாரணை’க்கு இடம் இல்லை. ஆஸ்திரேலியா, கனடா என 9 நாட்டின் படங்கள் இடம் பெற்றிருந்த நிலையில் விசாரணை படம் ஆஸ்கரில் இருந்து வெளியேறியுள்ளது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

Leave a Reply