இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் கவலைக்கிடம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் கடந்த இரண்டு நாட்களாக உடல்நலமின்றி டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
92 வயதாகும் பரதன், நேற்று முன்தினம் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவருடைய முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில் டில்லி தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
ஆனாலும் மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா கூறும் போது கடந்த 2 நாட்களாக பரதனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதுமில்லை என்று கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.