shadow

இளையராஜா பிரச்சனையில் காட்டும் அக்கறையை விவசாயிகள் மீது காட்டுவாரா வெங்கையா நாயுடு?

சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் இளையராஜா-எஸ்பிபி பிரச்சனை என்பது இருவருக்குள் நடைபெற்று வரும் தனிப்பட்ட பிரச்சனை. இருவரின் வருமானம் குறித்த ஒரு சிறிய பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழக விவசாயிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்சனையை மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ‘இளையராஜா, எஸ்பிபி பிரச்சனை ஆச்சரியம் அளிப்பதாகவும், இந்த பிரச்சனை விரைவில் சுமூகமாக முடியும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இளையராஜா-எஸ்பிபி பிரச்சனையில் காட்டும் அக்கறையில் ஒருசிறு அளவேனும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விவசாயிகளின் போராட்டத்தில் காண்பித்திருந்தால் இந்நேரம் விவசாயிகளின் குறை தீர்க்கப்பட்டு போராட்டமும் முடிந்திருக்கும். இப்போதுகூட மோசமில்லை. உடனே வெங்கையா நாயுடு உள்பட பிற அமைச்சர்கள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Leave a Reply