வேந்தர் மூவீஸ் மதன் மணிப்பூரில் கைது
வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே மாதம் 28ஆம் தேதி கங்கையில் சமாதி ஆக போவதாக லட்டர் எழுதி வைத்துவிட்டு மாயமாய் மறைந்து போனார். அவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி மதனின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது,.
இந்த உத்தரவின்படி தனிப்படையினர் மதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் கடந்த ஆறு மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். வாரணாசி, நேபாளம், மற்றும் இமயமலை பகுதிகளில் மதனை தேடிய தனிப்படை போலீசார் கடைசியில் மணிப்பூரில் இன்று கைது செய்துள்ளனர்.
மதனிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் வெகுவிரைவில் அவர் சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.