shadow

மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் தொடக்கம்…!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன் அறிவித்த நிலையில் இன்று வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் வகையில் அரசு அதிகாரிகள் வேதா இல்லத்தை அளவெடுக்கும் பணியில் இன்று ஈடுபட்டனர். ஜெயலலிதா இல்லத்தில் அவரது மறைவிற்கு பின், சசிகலா வசித்து வந்தார். பின்னர் அவர் சிறைக்கு சென்ற பின், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பராமரித்து வந்தார்.

இந்த நினைவிடத்தின் சட்டப்படியான வாரீசாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா இருக்கும் நிலையில் சட்டப்படி நினைவிடம் ஆக்குவது எப்படி? என்பது குறித்த ஆலோசனைகளும் நடந்து வருகிறது

Leave a Reply