shadow

ஆதாரத்தை வெளியிட்டால் தற்கொலை செய்து கொள்ள தயார். ‘வாணி ராணி’ சபிதா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘வாணி ராணி’ தொலைக்காட்சி தொடர் நடிகை சபிதா, அந்த தொடரின் மேனேஜருடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாக தனியார் தொலைக்காட்சி ஒன்று வீடியோவுடன் கூடிய செய்தி ஒன்றை ஒளிபரப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி முற்றிலும் தவறான செய்தி என்றும், தான் கடன் கொடுத்த பணத்தை பெறவே அவருடைய வீட்டுக்கு சென்றதாகவும், தந்தை வயது உள்ளவரிடம் தவறாக நடந்து கொண்டதாக வெளிவந்த செய்தியால் தான் மனமுடைந்து இருப்பதாகவும் சபிதா விளக்கம் அளித்துள்ளார்

இதுகுறித்து அவர் இன்று தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது: ‘அன்று நடைபெற்ற சம்பவத்தில் இருந்தது நான் தான். அதை மறுக்க வில்லை. ஆனால் எங்களுக்குள் எந்த தகாத உறவும் இல்லை. ஒரே ஒரு நாள் டி,.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பொய்யான செய்தியை பரப்பி என் வாழ்க்கையையே ஊடகங்கள் சிதைத்துவிட்டன. உங்களுக்கு ஒரு வெறும் செய்தியாக வெளிவரும் ஒரு பேப்பர். ஆனால் எனக்கு அது வாழ்நாள் கறை.

இந்த சம்பவத்திற்கு பின்னர் எந்த ஒரு மானமுள்ள பெண்ணாக இருந்தாலும் தற்கொலை செய்திருப்பார். ஆனால் எனக்கு தற்கொலையில் நம்பிக்கை இல்லை. அதுமட்டுமின்றி நான் என் அம்மாவை காப்பாற்றியாக வேண்டும். நான் தற்கொலை செய்துவிட்டால் அவர் அனாதையாகிவிடுவார். இருப்பினும் இரண்டு நாட்கள் அவருடன் நான் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை யாராவது வெளியிட்டால் நான் தற்கொலை செய்ய தயாராக இருக்கின்றேன்’

இவ்வாறு ஃபேஸ்புக்கில் நடிகை சபீதா கூறியுள்ளார்.

Leave a Reply