shadow

தமிழகத்தில் கோரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது

இந்த நிலை இதனை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அரசிடமிருந்து உரிய அனுமதி தரவில்லை என்பதால் திறக்காமல் இருந்த நிலையில் நாளை முதல் வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என இணை இயக்குனர் காஞ்சனா அவர்கள் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து நாளை முதல் சுற்றுலா பயணிகள் வண்டலூருக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது