வைகோவின் தனி வழி. மக்கள் நலக்கூட்டணி என்ன ஆகும்
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவே கூட்டணியில் இருந்து வெகுவிரைவில் பிரிந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி விவகாரம், இடைத்தேர்தல் ஆகியவற்றில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் அவ்வபோது கருத்துவேறுபாடு கொண்ட வைகோ, ரூபாய் நோட்டு பிரச்சனையில் தனிவழியை தேடிக்கொண்டார். மற்ற தலைவர்கள் அனைவரும் மத்திய அரசையும் மோடியையும் விமர்சனம் செய்த நேரத்தில் வைகோ மட்டும் பாஜக அரசை புகழ்ந்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கூட்டணியில் வைகோ. தன்னை இணைத்து கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகிறது. எனவே கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் விமர்சனங்களே இல்லாமல் அவர் மோடியை ஆதரிப்பதற்கும் காரணம் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.