அமெரிக்கா: 51 வயது முதியவருக்கு 14 வயது மகளை விற்ற பெற்றோர் கைது.
கடனில் தத்தளித்த அமெரிக்க தம்பதிக்கு உதவி செய்த 51 நபர் ஒருவருக்கு நன்றிக்கடனாக 14 வயது சிறுமியை பரிசாக அளித்த பெற்றோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியா என்ற பகுதியை சேர்ந்த 51 வயது லீ கப்லான் என்பவர் டேனியல்-சவில்லா ஸ்டாட்ஷ்பஸ் என்ற தம்பதியின் கடனை தீர்க்க உதவி செய்ததாகவும் இந்த உதவிக்கு நன்றிக்கடனாக அந்த தம்பதியினர் லீ கப்லானுக்கு தங்கள் 14 வயது மகளை பரிசாக கொடுத்ததாகவும் தற்போது அந்த சிறுமிக்கு கப்லான் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளும் இருந்ததையும் அமெரிக்க போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 14 வயது சிறுமியை கற்பழித்ததாக லீ கப்லானை கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியின் பெற்றோர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் கைதான ஒருசில மணி நேரத்தில் ரூ.6.5 கோடி ஜாமீன் தொகையில் மூவரும் விடுதலையாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.