ஊரடங்கு நேரத்திலும் அவசரமாக வெளியூர் போக வேண்டுமா? இதோ ஒரு வழி!
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு நாட்கள் முடிவடைந்து தற்போது ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த எண்ணை தொடர்பு கொண்டால் அவர்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.