shadow

எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு எதிரொலி. ஓபிஎஸ் அணி அவசர கூட்டம்

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்கள் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தன்னை வந்து சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு ஆட்சி அமைக்கவே என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகாக அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஓபிஎஸ் அவர்களின் இல்லத்தில் நடந்து வரும் இந்த அவசர ஆலோசனையில் மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply