கோவை சிபிஐ(எம்) அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்துவிட்டு மாயமாய் மறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சற்று முன்னர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான கே.ரமணி நினைவகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதமடைந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த குண்டுவீச்சால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.அடையாளம் தெரியாத மர்ம நபர்களின் இந்த குண்டு வீச்சுக்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.