எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பயிலும் 750 எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கான, தேசிய உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழு நேர வகுப்பில் எம்.பில்., அல்லது பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
மேலும், அறிவியல், மனிதவியல், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவை தனது ஆராய்ச்சிப் படிப்பில் தேர்வு செய்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: எம்.பில்., படிப்பவர்களுக்கு ரூ. 25,000 மற்றும் பிஎச்.டி., படிப்பவர்களுக்கு ரூ.28,000.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 23
மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in
Leave a Reply
You must be logged in to post a comment.