19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் திணறல்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் அரையிறுதி போட்டி கிர்ஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 272 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன்கில் அபாரமாக விளையாடி சதமடித்தார். மேலும் தொடக்க ஆட்டக்காரர்களான ஷா மற்றும் மஞ்ஜோத் கைரா தலா 41 மற்றும் 47 ரன்களை அடித்தனர்.
இந்த நிலையில் வெற்றி பெற 273 ரன்கள் தேவை என்ற நிலையில் சற்றுமுன் வரை பாகிஸ்தான் அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.