தினகரன் அணியில் இருந்து மேலும் இரண்டு எம்பிக்கள் தாவல்
ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுக தான் உண்மையான அதிமுக என்றும், அந்த அணிக்கே அதிமுகவின் பெயர், கட்சி, இரட்டை இலை ஆகியவை உரிமை என்றும் சமீபத்தில் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது
இந்த நிலையில் இரட்டை இலை கிடைத்தவுடன் தினகரனின் கூடாரம் காலியாகி கொண்டிருப்பதும், அதிமுக கை ஓங்கி கொண்டிருப்பதுமான காட்சிகள் அரங்கேறியுள்ளது.
ஏற்கனவே தினகரன் ஆதரவாளர்களாக இருந்த நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்தா, கோபாலகிருஷ்ணா ஆகியோர் தினகரன் அணியில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு எம்பிக்கள் தினகரன் அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
வேலூர் எம்பி செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் எம்பி உதயகுமார் ஆகியோர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அதிமுகவில் தற்போது இணணந்துள்ளனர். போகிற போக்கை பார்த்தால் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தினகரன் அணியில் இருக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.