shadow

26வது நாளில் விவசாயிகள் போராட்டம். டெல்லி மருத்துவமனையில் 2 விவசாயிகள் அனுமதி

கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கி இன்றுடன் 26 நாட்கள் ஆகிய நிலையில் இரண்டு விவசாயிகள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு, பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உணவு, தங்குமிடம் என பல்வேறு இன்னல்களை கடந்து, கடந்த 26 நாட்களாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தில்லியில் போராடி வரும் விவசாயிகளில் இருவர் உடல் நலக் கோளாறு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்ற விவசாயி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், திருச்சியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவரும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply