shadow

டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்

10 லட்சம் ஊழியர்கள் இந்த வங்கி ஊழியர் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் வங்கிகள் சட்ட மசோதாவை திரும்பப்பெற கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.