இரட்டையர்களுக்கு நடந்த திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்

தென் ஆப்பிரிக்க நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரட்டையர்களாக பிறந்த சகோதரர்களுக்கும் இன்னொரு இரட்டையர்களாக பிறந்த சகோதரிகளுக்கும் இடையே திருமணம் நடந்தது

பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் என்பதால் இரு இரட்டையர் ஜோடிகளுக்கும் முன்பின் பழக்கம் இல்லை. முதல் முறையாக திருமணத்தின் அன்றுதான் ஒருவரை ஒருவர் பார்த்து மோதிரம் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த இரட்டை ஜோடிகளுக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவை சிறப்பாக முடிந்தது. அதன் பின்னர் மறுநாள் காலையில்தான் மோதிரம் மாற்றிய பெண்ணுக்கு பதிலாக வேறு பெண்ணுடன் முதலில் நடந்தது இரு சகோதரர்களுக்கும் தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது

இதனை அடுத்து மோதிரம் மாற்றிய பெண்ணுடன் வாழ்வதா? அல்லது முதல் இரவு நடந்த பெண்ணுடன் வாழ்வதா? என்பது குறித்து குடும்பத்தினர் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன்பின் அந்த வீட்டில் பெரியவர்கள் கூடி ஆலோசனை செய்து முதல் இரவு நடந்த பெண்ணுடனே வாழ இரட்டையர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. அதன்பின் மோதிரங்களும் கழட்டி திரும்பவும் மாற்றப்பட்டது. இந்தக் குழப்பத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply