shadow

இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

செஞ்சி அருகே இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கி அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் துளசி என்ற அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் துளசி ஆந்திராவுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் அவரை ஆந்திராவில் கைது செய்ததுடன் அவரிடம் கிடைத்த வாக்குமூலத்தில் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக குழந்தை அடுத்ததாக கூறினார்
இதனை அடுத்து சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படும் பிரேம்குமார் கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்

இந்த நிலையில் குழந்தையை தாக்கிய துளசி நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது