shadow

அமெரிக்க-மெக்சிகோ எல்லை சுவற்றின் மூலம் வருமானம்: டிரம்ப்பின் அதிரடி ஐடியா

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது பிரச்சாரம் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் என வாக்குறுதி அளித்தார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்தே இந்த சுவர் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து வருகிறார். இந்த சுவரை கட்டி முடித்துவிட்டால் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து குடியேறுவதை தடுக்க முடியும் என்பதோடு போதை பொருள் கடத்தலுக்கும் முடிவு கட்ட முடியும் என்பதே அவருடைய எண்ணமாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இரு நாட்டு எல்லையான சுமார் 2 ஆயிரம் மைல் தூரத்துக்கு சுவர் கட்ட குறைந்தது ரூ.6500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டது. எனவே இந்த செலவை ஈடுகட்டும் வகையில் பயனுள்ள யோசனைகள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதை தொடர்ந்து கட்டப்படும் சுவர்களில் சூரிய ஒளி தகடு பதித்து அதன் மூலம் மின்சாரம் பெற முடியும் என பொதுமக்களும் கம்பெனிகளும் ஆலோசனை கூறி இருந்தனர்.

இதை பரிசீலனை செய்த அதிபர் டிரம்ப்பு மெக்சிகோ எல்லையில் புதிதாக கட்டப்படும் சுவரில் சூரிய ஒளி மின்சாரம் தகடுகள் பதிக்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுவரை ஒட்டியுள்ள மெக்சிகோ நாட்டின் நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு மின்சாரம் விற்பனை செய்ய முடியும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply