வெள்ளை மாளிகையில் டிரம்ப்புடன் உணவு சாப்பிடும் முதல் உலகத் தலைவர் மோடி!!
பாரத பிரதமர் நரேந்திரமோடி போர்ச்சுக்கல், அமெரிக்கா உள்பட சில நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்ய நேற்று டெல்லியில் இருந்து கிளம்பினார். இந்த நிலையில் அவர் நாளை அமெரிக்கா செல்லவுள்ளார்/
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பின்னர் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் இரவு உணவு சாப்பிடுகின்றனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து வெள்ளை மாளிகையில் உலக தலைவர் ஒருவருடன் இரவு உணவு அருந்துவது இதுதான் முதல்முறை. அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஆதரவு அனைத்து மட்டத்திலும் தேவை என்பதை உணர்ந்திருக்கும் அமெரிக்கா மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்க தயாராகி வருகிறது.
குறிப்பாக உலகப் பொருளாதரத்தில் இன்று மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா பல்வேறு சிறப்புக்களை பெற்றுள்ளது. அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவு, பாதுகாப்பு என அனைத்து வகையிலும் இந்தியாவின் நட்பு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது வர்த்தகம், மென்பொருள் பணியார்களுக்கான விசா கெடுபிடிகள் ஆகியவை குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.