shadow

செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போது  ‘கட்’ ஆனால் கட்டணம் வசூல் செய்ய கூடாது. டிராய் அதிரடி!
cell-phones1
செல்போனில் ஒருவரிடம் பேசி கொண்டிருக்கும் போது நாமோ அல்லது நம்மிடம் பேசி கொண்டிருப்பவரோ தொடர்பை கட் செய்யாமல் தொழில்நுட்ப கோளாறினால் திடீரென லைன் துண்டிக்கப்பட்டால் அதற்குரிய  கட்டணத்தை செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க கூடாது என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நுகர்வோர்களை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே, சிக்னல் கோளாறு காரணமாகமாகவோ அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ பேசுவதில் சிலசமயம் தடை ஏற்படுவது உண்டு. இந்த அனுபவம் கிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவ்வப்போது ஏற்படும் அனுபவங்களில் ஒன்றாக இருக்கிறது.  இதன் காரணமாக  வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தையும் இழந்து பேச வேண்டிய விஷயங்களை பேச முடியாமல் போவதால், அவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்தப்  பிரச்னைக்கு உடனடியாகத்  தீர்வு காணமாறு அண்மையில் பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

பிரதமரின் உத்தரவை அடுத்து பல்வேறு கட்ட ஆய்வுகளை டிராய் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தனது பரிந்துரை அறிக்கையை டிராய் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், ” செல்போனில் ஒருவர் பேசி கொண்டிருக்கும் போது, திடீரென தடை ஏற்பட்டால் கட்டணம் வசூலிக்க கூடாது. அதன் தடையை ஈடு செய்ய இலவசமாகக்  கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும், அல்லது கட்டணத்தைத்  திருப்பி செலுத்திவிட வேண்டும். அழைப்பு வந்த முதல் 5 விநாடிகளிலேயே தடைபட்டால் அந்த அழைப்புக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது” என பல்வேறு முக்கிய பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply