shadow

பாவத்திலிருந்து விடுபட பாஜகவில் இணைய வேண்டும்: முதலமைச்சர் பேச்சால் பரபரப்பு

எதிர்க்கட்சிகள் தாங்கள் செய்த பாவத்திலிருந்து விடுபட பாஜகவில் இணைய வேண்டும் என திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

பாஜக கங்கை நதியை போன்ற புனிதமானது என்றும் எதிர்க்கட்சியில் யாராவது பாவம் செய்திருந்தால் அவர்கள் பாஜகவில் இணைந்தால் தங்களது பாவங்களில் இருந்து விடுபடலாம் என்றும் தெரிவித்துள்ளார்

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.