குடியிருப்பு பகுதிகளில் புகுந்த ரயில். 5 பேர் பரிதாப பலி
மெக்சிகோ நாட்டில் உள்ள கடேபெக் என்ற நகரில் ரெயில் ஒன்று தடம்புரண்டு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாகா உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோ நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கடேபெக் நகரில் நேற்று கன்சாஸ் நகரிலிருந்து வந்த ரெயிலானது திடீரென தடம் புரண்டது. இதனால், ரெயில் பெட்டிகள் தாறுமாறாக கவிழ்ந்தன. ஒரு பெட்டி அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.