shadow

8 பேண்ட், 10 சட்டை அணிந்து விமானத்தில் பயணம் செய்த பயணி கைது

விமானத்தில் லக்கேஜ் கட்டணம் அதிகமாவதை தவிர்ப்பதற்காக தனது உடலில் 8 பேண்ட்களையும், 10 சட்டைகளையும் அணிந்து சென்ற பயணி ஒருவர் ஐஸ்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ரையான் ஹவாய் என்பவர், ஐஸ்லாந்து சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் தனது நாட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது, லக்கேஜ் கட்டணத்தை தவிர்க்க புத்திசாலித்தனமாக யோசித்த அவர், 10 சட்டைகளையும், 8 டவுசர்களையும் அணிந்து, துணிமூட்டை போல் சென்றுள்ளார்.

இதைப்பார்த்த விமான நிலைய அதிகாரிகள், ரையான் ஹவாய் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர், விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அந்த காட்சிகளை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், சிறிதுநேர விசாரணைக்குப் பிறகு உரிய கட்டணங்களை செலுத்தி, இங்கிலாந்துக்கு வேறு ஒரு விமானத்தில் திரும்பியுள்ளார்.

Leave a Reply