மகாராஷ்டிரத்தில் நால்வர், தமிழகத்தில் ஒருவர்: கொரோனா குறித்த ஒரு நல்ல செய்தி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் தற்போது கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

அதேபோல் மதுரையில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் தற்போது குணம் ஆகி விட்டார்

மகாராஷ்டிராவில் உள்ள நால்வரும் தமிழகத்தில் உள்ள ஒருவரும் என மொத்தம் ஐந்து பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமாகி இருப்பது இந்தியா முழுவதற்குமான ஒரு நல்ல செய்தியாக கருதப்படுகிறது

Leave a Reply