shadow

நாளை 3வது டெஸ்ட் தொடக்கம்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் நாளை ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியிடம் இதுவரை ஒரு தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்தது கிடையாது. எனவே அந்த பெருமையை தக்க வைத்து கொள்ள குறைந்தபட்சம் 3வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் சொந்த நாட்டில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணி நல்ல ஃபார்மில் இருப்பதால் இது சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply