கனமழையால் நாளை விடுமுறை என அறிவிப்பு: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் இன்றே ஒரு மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ஆம், தூத்துக்குடியில் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என தூத்துகுடி மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். தூத்துகுடி மாவட்டத்தை தொடர்ந்து கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரும் அறிவித்துள்ளார்.
மேலும் கனமழை காரணமாக குன்னுார் – மேட்டுப்பாளையம் மலை ரயில் நாளை முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.