shadow

4 நாள் விடுமுறையை தொடர்ந்து நாளையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் பள்ளி விடுமுறை என அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கலியுகவரதன் பெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெற உள்ளதை அடுத்து நாளை அதாவது ஏப்ரல் 18-ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் அரசு அலுவலர்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் ஐந்தாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது