shadow

கனமழை எதிரொலி: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதை அடுத்து நாளை பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நாளை கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் மழை பெய்யும் என்று கூறப்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.