shadow

நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கடந்த சில நாட்களாக தமிழகம் புதுவை மற்றும் தென் மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தற்போது கனமழை தொடர்ந்து வருவதை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை அரசு இந்த விடுமுறையை அறிவித்துள்ளது என்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.