பள்ளி, கல்லூரிகள் நாளை விடுமுறையா? கலெக்டர் அதிரடி தகவல்

கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் நாளை இயங்காது என்ற ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்து முன்னணி சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பே இந்த வதந்திக்கு காரணமாக இருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்றும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி அவர்களின் இந்த அறிவிப்பால் நாளை கோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply