ஏப்ரல் 14 இல் கட்சி அறிவிப்பு: நாளை ரஜினி அறிவிக்க இருப்பதாக தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர்களை சந்திக்க உள்ளார்

இந்த சந்திப்பில் மாவட்ட செயலாளர்களுடன் சில முக்கிய ஆலோசனை நடத்த போவதாகவும் அதன் பின்னர் அதிரடி அறிவிப்புகளை ரஜினிகாந்த் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்திற்குப் பின் ரஜினிகாந்த அரசியல் கட்சியை அறிவிக்கும் தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது இதனால் ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply