shadow

நாளை இந்தியா-பாகிஸ்தான் பலப்பரிட்சை. இந்தியாவின் வெற்றி தொடருமா?

இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்தியாதான் வென்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் 2015ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் மோதின. இந்த போட்டியிலும் இந்தியாதான் வென்றது. 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நாளை பிர்மிங்காமில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன.

ஆனாலும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை பொறுத்தவரையில் இரண்டு முறை பாகிஸ்தானும், ஒருமுறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் இந்திய அணியின் தற்போது இருக்கும் வலிமைக்கும் பாகிஸ்தான் அணி ஈடுகொடுக்க முடியாது என்றே விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் மிக நீண்ட பேட்டிங் வரிசை, சிறப்பான பவுலர்கள் மற்றும் விராத்கோஹ்லியின் ஆவேசமான கேப்டன்ஷிப் ஆகியவை மீண்டும் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தரும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply