shadow

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் – ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ இருக்கும் என்றும், சில சமயத்தில் 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.

எண்ணூர், நாகை, காரைக்கால் என 7 கடலோர துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்