shadow

சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

சென்னையில் நாளை 2000 இடத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் நாளை ஒரு வார்டுக்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2000 கொரோனா சிறப்பு முகாம் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாளைய சிறப்பு முகாமில் தடுப்பூசி செய்து கொள்ளலாம் என்றும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது