shadow

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருகிறது

இந்த நிலையில் இன்று மாலை 150 ரூபாயை தக்காளி விலை தாண்டிவிட்ட நிலையில் நாளை 200 ரூபாயை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை காரணமாக தக்காளி சாகுபடி குறைவாக உள்ளது என்பதால் தக்காளியை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்குவதால் விலை ஏறிக்கொண்டே போகிறது

நாளை அல்லது நாளை மறுநாள் தக்காளியின் விலை 200ரூபாயை தொடலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.