கேரளாவில் பரபரப்பு

இந்தியாவின் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதிலும் கேரளாவில் மது கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. சமீபத்தில் மருத்துவ சான்றிதழ் வாங்கி வருபவர்களுக்கு மதுக்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து மது சப்ளை செய்யப்படவில்லை

இந்த நிலையில் தற்போது மே 13ஆம் தேதி முதல் கேரளாவில் கள்ளுக்கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தென்னை மற்றும் பனங்கள் காய்கறி உற்பத்தியாளர்கள் தற்போது கள்ளுகளை இறக்குவதற்கான பணிகளை மேற் கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இருப்பினும் கள்ளுக்கடைகள் திறப்பதற்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளதா? என்பது குறித்த செய்திகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் கள்ளுக்கடை திறக்கப்படும் என்ற செய்தியால் மது பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply