தமிழக பந்த் நிலவரம். இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை
காவிரி பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. ஆயினும் அரசு பேருந்துகளும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கி வருகிறது. ஒருசில ஆட்டோக்கள் மற்றும் ரயில்கள் ஓடி வருவதால் போக்குவரத்தில் பெரிய பாதிப்பில்லை
முழு அடைப்பின்போது தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல், அமைதியான முறையில் நடைபெறுவதற்காக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக டி.ஜி.பி. தலைமையிலான போலீசார் எடுத்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சார ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
திரையரங்குகளும், திரைப்பட படப்பிடிப்பும் முழு அடைப்பில் கலந்து கொண்டுள்ளன. மொத்தத்தில் வேலை நிறுத்தத்தால் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.