shadow

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தினந்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 105 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலமாக மாறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,51,815என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது

மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 265 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் யாரும் இல்லை என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,127 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.