shadow

பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்: சென்செக்ஸ் நிப்டி நிலவரம்

பங்குச்சந்தை கடந்து சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் நிலவரத்தின் படி சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 61,047 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல் நிப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 18,138 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக பங்கு சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் எந்த நேரமும் பங்கு சந்தை சரிய இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.