தேர்தல் ஆணையம்!

நாடு முழுவதும் காலியாக இருந்த 24 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 5 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் மீதியுள்ள 19 எம்பிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெறுகிறது.

குஜராத்தில் தலா 4 இடங்கள், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்கள், ஜார்க்கண்ட்டில் 2, மணிப்பூர், மிசோரம், மேகாலயாவில் தலா 1 என மொத்தம் 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜகவின் இரன்னா கடாடி, அசோக் கஸ்தி ஆகியோரும் அருணாசலப் பிரதேசத்தில் பாஜகவின் நாபம் ரெபியா ஆகிய ஐவர் போட்டியின்றி ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக தேர்வாகிவிட்டனர்

Leave a Reply