shadow

இன்னும் 2 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை: எந்தெந்த மாவட்டத்தில்?

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் 90 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில் இன்னும் 2 மணி நேரத்தில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது