shadow

19 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தென்கிழக்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக இன்று 19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது தெரிந்ததே.

மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 620 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும் இந்த புயல் து நாளை நள்ளிரவு புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .