shadow

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தினால் வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளதால் மார்ச் 8ஆம் தேதி குறைந்தபட்சம் பத்து ரூபாய்க்கு மேல் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 7ம் தேதியுடன் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடைந்துவிடும் என்பதால் அதன்பிறகு உயரவுள்ள பெட்ரோல், டீசல் விலை குறித்து பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்

இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது.