விடிய விடிய மழை உறுதி: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று விடிய விடிய மழை பெய்யும் என்றும், அதனால் சென்னையில் உள்ள பொதுமக்கள் இன்று இரவு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில், ’சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து உள்ளதால் இன்று இரவு கனமழை பெய்யும். எனவே இம்மூன்று மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.

மேலும் நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய இடங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதால் இன்று இரவு விடிய விடிய மற்றும் நாளை அதிகாலை வரை கன மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply