shadow

நீட் தேர்வு விலக்கு மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நிலையில் அந்த மசோதாவை கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டதால் மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்ற இன்று சிறப்பு சட்டமன்றம் கூடுகின்றது.

இன்று காலை 10 மணிக்கு கூடும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் இந்த மசோதா மீண்டும் கவர்னருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இன்றைய பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது