இன்று திமுக பேரணி: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று பிரம்மாண்டமான பேரணியை நடத்த இருப்பதை அடுத்து இந்த பேரணி குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

திமுகவின் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் இந்த பேரணிக்கு தடை விதிக்க முடியாது என்றும் அதே நேரத்தில் இந்த பேரணி பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் திமுகவின் பிரமாண்டமான பேரணி தொடங்க உள்ளது. இந்த பேரணியில் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த பேரணிக்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு செய்ய உள்ளதாகவும் பேரணி முழுவதையும் போன்கள் மூலம் கண்காணிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்

Leave a Reply