shadow

தமிழகத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா: சுகாதாரத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 பேர் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

மேலும் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள் யாருமில்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 46 என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

மேலும் தற்போது தமிழகம் முழுவதும் 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.