தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இன்ஜினியர் பணிகளுக்கான தேர்வு ஒன்றை நடத்தியது. அந்த தேர்வின் விடைகளை சென்ற வாரம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அந்த விடைகளைப்பார்த்து தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்ஜினியர் தேர்வுக்கான விடைகளுக்கு பதிலாக இனிமேல் நடக்கப்போகும் வேறொரு தேர்வுக்கான விடைகளை அதில் வெளியிட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை செய்ய தேர்வுத்துறை ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் இந்த குழப்பத்திற்கு சம்பந்தப்பட்ட பிரிவின் துணைச்செயலாளர் மற்றும் பிரிவு அலுவலர் ஆகிய இருவருமே காரணம் என தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் சஸ்பெண்ட் செய்ய தேர்வுத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

இன்ஜினியர்  தேர்வுக்கான உண்மையான விடைகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply